தை மாத ராசி பலன்கள் – துலாம்!!

664

thula

யாருக்கும் அஞ்சாமல் அடிமனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே செய்து சாதிப்பவர்களே, மனசாட்சியை முக்கிய சாட்சியாக நினைப் பவர்களே, மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்களே! உங்களுடைய ராசிக்கு 9ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி காணும் சக்தி கிடைக்கும்.

ஏழரைச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். என்றாலும் ராகுவும் ராசிக்குள் நிற்பதால் அவ்வப்போது குழம்புவீர்கள். கோபப்படுவீர்கள். தள்ளிப்போன வாய்ப்புகளை நினைத்து சங்கடப்படுவீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் வக்ரமாகி 3ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்புகள் வரும். எல்லோரும் உங்களை குறை கூறுவார்கள். உங்களின் பாக்யாதிபதியான புதன் 4ம் வீட்டில் வலுவாக நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்பிருக்கிறது.

பாதகாதிபதியான சூரியன் 4ம் வீட்டில் நிற்பதால் தாயாருடன் மனத்தாங்கல் வரும். செவ்வாய் 12ல் மறைந்திருப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படும்.
அரசியல்வாதிகளின் செல்வாக்கு கூடும். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமாவீர்கள். எதிர்க் கட்சியினரை உங்களின் சாதூர்யமான பேச்சால் மடக்குவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழடைவீர்கள்.

மாணவர்களே கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களை தவிர்த்து விடுங்கள். டி.வி. பார்க்கும் நேரத்தை குறையுங்கள். பெற்றோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. கன்னிப் பெண்கள் புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். காதல் விவகாரத்தில் தெளிவு பிறக்கும். போட்டித் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வரன் அமையும்.

வியாபாரம் சூடுபிடிக்கும். பற்று வரவு உயரும். பழைய கடன்கள் வசூலாகும். புது வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்களின் புதிய முடிவுகளை வரவேற்பார்கள். அரசாங்கத்தாலும் வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, மருந்து வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

ஆனால் ஜென்மச் சனி நடைபெறுவதால் எதிர்ப்புகளும் ஒருபக்கம் இருந்து கொண்டேயிருக்கும். குரு சாதகமாக இருப்பதால் அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் அல்லது வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். விவசாயிகள் பூச்சித் தொல்லையை கட்டுப்படுத்துவீர்கள். தண்ணீர் வசதி பெருகும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளால் உற்சாகமடைவீர்கள். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். காத்திருந்து காய் நகர்த்தும் மாதமிது.

ராசியான திகதிகள்:
ஜனவரி : 17, 18, 19, 20, 26, 27, 28, 29
பெப்ரவரி : 3, 4, 5, 6.

சந்திராஷ்டம தினங்கள் : பெப்ரவரி 7ம் திகதி மாலை 5 மணி முதல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இனந்தெரியாத கவலைகள் வந்துபோகும்.

பரிகாரம் : சிவனை வழிபடுங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று இயன்றளவு உதவுங்கள்.